Header Ads Widget

TNPSC Study Material-Current Affairs in Tamil:Poverty Index

 

 

 TNPSC Study Material-Current Affairs in 

                Tamil:Poverty Index

 

 

Tnpsc Group 2 Current Affairs : 


UNDP ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்ட Multidimensional Poverty Index(MPI) ல் இந்தியா 66வது இடத்தை பெற்றிருந்தது. 

 

இந்தியாவின் Think Tank எனப்பட கூடிய NITI AAYOG இந்திய மாநிலங்களுக்கான MPI அறிக்கையை வெளியிடுகிறது. 

 

 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL 2021-2022

 

 

 

இந்த அறிக்கை பல முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கிறது. அவற்றில் சிலவற்றை காணலாம். 

 

1) இந்தியாவில் 25.01% மக்கள் ஏழைகள்.

2)கேரளா 0.7 % ஏழைகளை கொண்டுள்ளது.

3)தமிழ்நாடு 4.9 % ஏழைகளை கொண்டுள்ளது.

4)பீகார் அதிகபட்சமாக 51.9% ஏழைகளை கொண்டுள்ளது.

5)கோட்டயம் மாவட்டம் இந்தியாவின் ஏழைகளற்ற ஒரே மாவட்டமாக பதிவாகியிருக்கிறது..

*Kerala Model of Development* என்கிற சொல்லாடல்கள் நல்ல வளர்ச்சி நிலைக்கு உதாரணங்களாக சொல்லப்படுகின்றன..

அதன் பின்னனி விரிவாக பேசப்படவேண்டிய ஒன்றாகும்..

தற்போது சில பொதுவான கரணங்களை காணலாம்.

கல்வி - அதிகமான முதலீடு இதில் மேற்கொள்ள படுகிறது. 2020-21 ல் கேரளா 14.6 % கல்விக்காக நிதி ஒதுக்கியது . இது மற்ற மாநிலங்களை விட அதிகம்.

கோட்டயம் - இந்தியாவில் முதல் கல்லூரி கிரித்தவ மிஷனரிகளால் கோட்டயத்தில் தான் தொடங்கப்பட்டது. 1989 லேயே 100% கல்வியறிவு பெற்ற மாவட்டமாக இது வளர்ச்சி கண்டுவிட்டது அன்று முதல் கவனமாக அதன் வளர்ச்சிக்கு வித்திட்டது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம்..

அடுத்ததாக அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்புகளை கூறலாம்..

* அனைத்து நாட்களிலும் பசியுள்ளவர்களை தேடி பசி தீர்க்க கல்லூரி மாணவர்கள் முதல் பல அமைப்புகள் இயங்கி வருகின்றன .

பெண்களுக்கு பாகுபாடற்ற கல்வி அனைத்து நிலைகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோட்டயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் 100% மக்கள் நல அமைப்பாக அவர்களை நெருங்குகின்றனர். எனவே தரமான நல் ஆளுகையும் உறுதி செய்யபடுகிறது.

    
   

Post a Comment

0 Comments